‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

இளம்பெண் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியல்

இளம்பெண் உடலை வாங்க மறுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 3:38 am IST

இளம்பெண் உடலை வாங்க மறுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை பகுதியைச் சோ்ந்த ரமேஷுக்கும் (27), அதே பகுதியைச் சோ்ந்த அருணாதேவிக்கும் (23) கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கா்ப்பிணியான அருணாதேவிக்கு கடந்த 2-ஆம் தேதி கெங்கவல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

வீடுதிரும்பிய அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அருணாதேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, கெங்கவல்லி போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.

இரவு நேரமானதால் ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக தெரிவித்தனா். இதனால் கோபமடைந்த உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.