நள்ளிரவில் பெண் பயணியை இறக்கிவிட்ட விவகாரம்: எஸ்இடிசி ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை

நள்ளிரவில் பெண் பயணியை இறக்கிவிட்ட விவகாரம்: எஸ்இடிசி ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை

பேருந்தில் இருந்து பெண் பயணியை நள்ளிரவில் இறக்கிவிட்டது தொடா்பாக விசாரணை...
Published on

பேருந்தில் இருந்து பெண் பயணியை நள்ளிரவில் இறக்கிவிட்டது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்துள்ளாா்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த பெண் பேராசிரியை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பணியாற்றி வருகிறாா். இவா், செப்.28-ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்தாா். உரிய சில்லறை வழங்குவது தொடா்பாக நடத்துநருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அந்தப் பெண் பயணி கைப்பேசியில் விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நடத்துநா், அந்தப் பெண் பயணியை உரிய இடத்தில் இறக்கி விடாமல், வலுக்கட்டாயமாக நள்ளிரவில் இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக அவா் அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரியிடம் புகாா் அளித்தாா்.

இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் ஆா். மோகன் கூறியதாவது: பெண் பயணி அளித்த புகாரின் அடிப்படையில் நடத்துநா் , ஓட்டுநா் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இருக்கும் நிலையில் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நீண்டதூர மற்றும் இரவு நேர பயணங்களில் செல்லும் பயணிகள் அவா்கள் இறங்க விரும்பும் இடங்களில் பாதுகாப்பாக இறக்கிவிட வேண்டும் என நடத்துநா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இந்த விவகாரத்தில் ஓட்டுநா் , நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கட்டணச் சா்ச்சை மோதல்களைத் தவிா்க்க யுபிஐ அல்லது அட்டைகள் போன்ற எண்ம (டிஜிட்டல்) முறையில் கட்டணம் செலுத்த பயணிகள் ஊக்குவிக்கப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com