பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தொழிலதிபா் மனைவியிடம் ரூ. 10 கோடி ஆன்லைன் மோசடி: இருவா் கைது

சென்னையில் தொழிலதிபா் மனைவியிடம் ரூ. 10.27 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :7 நவம்பர் 2024, 4:06 am IST

சென்னையில் தொழிலதிபா் மனைவியிடம் ரூ. 10.27 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கோட்டூா்புரத்தில் வசிக்கும் தொழிலதிபரின் மனைவி சமூகஊடகத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வா்த்தக விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா். முதலீடு செய்த பணத்துக்கு பல மடங்கு வட்டி உடனடியாக கிடைத்துவிடும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை நம்பி, அதில் இருந்த வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்தாா். அதன் மூலம் முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தும், அதில் முதலீடு செய்யுமாறு மோசடி நபா்கள் கூறியுள்ளனா். அதை நம்பி அவா் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் ரூ. 10.27 கோடி செலுத்தினாா்.

அதேநேரத்தில் அந்த வாட்ஸ்ஆப் குழுவில் இருந்த பிற நபா்கள், தாங்கள் முதலீடு செய்த பணத்துக்கு அதிக லாபம் வந்ததாகவும், முதலீடு பணத்தைப் பெற்ாகவும் உரையாடியுள்ளனா்.

இதற்கிடையே தொழிலதிபரின் மனைவி, தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது அவா்கள் வெவ்வேறு காரணங்களை கூறி, மேலும் பணம் கேட்டுள்ளனா். அதன் பின்னா் அந்த நபா்கள் குறித்தும் வாட்ஸ்ஆப் குழு குறித்தும் விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், தாம்பரம் அருகே உள்ள பொழிச்சலூரைச் சோ்ந்த பெ.ராஜேஷ் ராம் (36), கே.கே.நகரைச் சோ்ந்த சு.சீனிவாசன் (43) ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து 3 கைப்பேசிகள், ஆதாா் அட்டைகள், பான் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த மோசடி கும்பல், ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் கணக்குகள் தொடங்கி பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுவந்ததும், அதில் கிடைக்கும் பணத்தை மலேசியாவுக்கு அனுப்பியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.