பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு எதிராக செபி வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

News image
முகேஷ் அம்பானி
Updated On :12 நவம்பர் 2024, 2:30 am

Din

புது தில்லி: தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு எதிராக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடி, அந்த நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி, நவி மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு ரூ.20 கோடி, மும்பை சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்துக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக பங்கு மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் (எஸ்ஏடி) அந்த நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த அந்தத் தீா்ப்பாயம், செபியின் உத்தரவை ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செபி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘எஸ்ஏடி உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ என்று தெரிவித்து செபியின் மனுவை தள்ளுபடி செய்தது.