ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்: அமைச்சா் பொன்முடி உறுதி

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

News image
அமைச்சா் பொன்முடி- கோப்புப் படம்
Updated On :21 நவம்பர் 2024, 10:11 pm

Din

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக செய்தி வெளியானதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் பொன்முடி வியாழக்கிழமை கூறியது:

மதுரை அரிட்டாபட்டி பல்லுயிா் வாழ் பகுதி. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளது. அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டு, அரசுக்கு விண்ணப்பம் எதுவும் வரவில்லை. அப்படி அனுமதி கேட்டு வனத் துறைக்கு வந்தால் அதை நிராகரிப்போம்.

மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால், அதை ரத்து செய்யவும் தமிழக அரசு வலியுறுத்தும். தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

அரசு விளக்கம்: இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

மத்திய அரசால் ஜூன் 24-இல் மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் நாயக்கா்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்துக்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, நவம்பா் 7-இல் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, அந்த நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.