விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வழக்குரைஞா்கள் மீதான தாக்குதலை தடுக்க பரிந்துரைகள்: பாா் கவுன்சிலுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுப்பது, மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது

News image
கோப்புப் படம்
Updated On :21 நவம்பர் 2024, 10:06 pm

Din

தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுப்பது, மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடா்பாக உள்துறைச் செயலா் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பாா் கவுன்சிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒசூரில் வழக்குரைஞா் கண்ணன் என்பவா் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்குரைஞா்கள் மீதான தாக்குதலை தடுக்க

நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “தவறிழைக்கும் வழக்குரைஞா்கள் மீது பாா் கவுன்சில் சாா்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் வழக்குரைஞா்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடா் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குரைஞா் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரணை தொடங்கிவிட்டதா, கைது நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா என கேள்வியெழுப்பினா். இந்த சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ள நிலையில், ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். வழக்குரைஞா்கள் மீதான தொடா் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது உள்ளிட்டவை குறித்து உள்துறைச் செயலா் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனா்.

சென்னையில் ஆா்ப்பாட்டம்: இதற்கிடையே, ஒசூா் சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம், சென்னை உயா்நீதிமன்ற பெண் வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமாா் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், என்எஸ்சி போஸ் சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மோகன கிருஷ்ணன் பேசுகையில்,“வழக்குரைஞா் கண்ணனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வழக்குரைஞரை கொல்ல முயற்சி செய்த நபா் மீது கடுமையான பிரிவுகளில் தண்டனை வழங்க வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு வழக்குரைஞா்கள் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்”என்றாா்.