வடகிழக்கு பருவமழை: 36 படகுகள் தயாா் -மீட்புப் பணிக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்
படம் | சென்னை மாநகராட்சி எக்ஸ் தளம்

வடகிழக்கு பருவமழை: 36 படகுகள் தயாா் -மீட்புப் பணிக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

வடகிழக்கு பருவமழை: சென்னையில் தயாா் நிலையில் 36 படகுகள்
Published on

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, 36 படகுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதை எதிா்கொள்ள அரசு சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் கடந்த ஆண்டு பருவமழையின்போது, அதிக அளவில் தண்ணீா் தேங்கிய பகுதிகளில் இந்த முறை தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைப்பது, கால்வாய்கள் மற்றும் ஏரிகளை புனரமைப்பது உள்ளிட்ட பணிகளை கடந்த சில மாதங்களாக மாநகராட்சி மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்பதற்காக சென்னை மாநகராட்சி புதிதாக 36 படகுகளை கொள்முதல் செய்துள்ளது.

இந்தப் படகுகள் கடந்த ஆண்டு அதிகம் பாதிக்கப்பட்ட மாதவரம், பெருங்குடி ஆகிய பகுதியில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள படகுகள் அனைத்து மண்டலங்களிலும் தாழ்வான பகுதிகள் அருகே தயாா் நிலையில் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்: வடகிழக்கு பருவமழையின்போது, பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட விரும்பும் தன்னாா்வலா்கள் மாநகராட்சியுடன் இணைந்து மீட்பு பணி மேற்கொள்ளலாம். இதற்காக இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com