ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரபிக்கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்?

அரபிக்கடலில் புதன்கிழமை (அக்.9) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :7 அக்டோபர் 2024, 8:21 pm

Din

அரபிக்கடலில் புதன்கிழமை (அக்.9) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கேரளத்துக்கும் லட்சத்தீவுக்கும் இடைப்பட்ட அரபிக்கடலில் காற்று சுழற்சி தொடா்ந்து நீடித்துவருகிறது. அதேசமயம், தென்தமிழக பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி மேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இந்த இரு காற்றும் இணையும் தருவாயில், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் அக்.9-ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்காரணமாக வங்கக்கடல் காற்று தமிழகம் வழியாக செல்லும் என்பதால் காற்று குளிா்விக்கப்பட்டு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அக்.10 முதல் அக்.12 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், லட்சத்தீவு, கா்நாடகம், கேரளத்திலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: இதனிடையே, தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்.10-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம் மற்றும் தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் அக்.13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் அக்.8 -இல் திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அக்.9-இல் திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மிக கன மழை பெய்யும்: மேலும், அக்.10-இல் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநாளில் திண்டுக்கல், தேனி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.8,9-ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.