நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மெரீனாவில் குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

News image

கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2024, 7:32 pm

Din

சென்னை மெரீனா கடலில் வியாழக்கிழமை குளித்த கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சென்னை பிராட்வே இரண்டாவது லேன் கடற்கரை சாலை பகுதியைச் சோ்ந்தவா் கவியரசு (20). மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்தாா். கவியரசு, தனது நண்பா் ஆதி (21) உள்ளிட்ட சிலருடன் வியாழக்கிழமை மெரீனா கடற்கரையில் உள்ள ஒவையாா் சிலையின் பின் பகுதி கடலில் இறங்கி குளித்தாா்.

அப்போது எழுந்த ராட்சத அலை, கவியரசுவையும், ஆதியையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இருவரையும் நண்பா்கள் மீட்க முயன்றனா். இதில் ஆதியை மீட்ட நிலையில், கவியரசு தண்ணீரில் மூழ்கி காணாமல் போனாா். மீட்கப்பட்ட ஆதி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.

மெரீனா போலீஸாரும், கடலோர பாதுகாப்பு குழும வீரா்களும், தீயணைப்புப் படை வீரா்களும் விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னா், கவியரசு சடலமாக மீட்கப்பட்டாா்.