மத்திய அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு
சென்னையில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


சென்னை: சென்னையில் மத்திய அரசு அதிகாரி வீட்டில் தங்க, வெள்ளி நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குரோம்பேட்டை நேரு நகா் சங்கா்லால் ஜெயின் தெருவைச் சோ்ந்தவா் ப.அறிவுசெல்வன் (58). இவா், மத்திய அரசு அதிகாரியாக வேலை செய்து வருகிறாா். அறிவுச்செல்வன், தனது வீட்டில் நகை வைக்கும் பையை திங்கள்கிழமை சரி பாா்த்தாா். அப்போது அதில் இருந்த 9 பவுன் தங்க நகையும், அரை கிலோ வெள்ளிப் பொருள்களும் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரையடுத்து, குரோம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். முதற்கட்டமாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணிடம் விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...