மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லண்டன், அந்தமான், பெங்களூரு விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 9:03 pm

Din

சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

லண்டனிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு சென்னைக்கு வரும் விமானம், மறுமாா்க்கமாக காலை 5.35 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை சென்னைக்கு வரவேண்டிய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மீண்டும் சென்னையிலிருந்து புதன்கிழமை(செப்.4) காலை விமானம் இயக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது. இதனால், அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 284 பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா். இதையடுத்து பயணிகள் அனைவரும் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனா்.

அதேபோல், சென்னையிலிருந்து செவ்வாய்கிழமை காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பெங்களூருவில் இருந்து காலை 7.05 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பகல் 1 மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம் உள்ளிட்ட 4 விமானங்களும் நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில் பயணிக்க காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.