திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வயநாடு நிவாரண நிதி: மாா்க்சிஸ்ட் ரூ. 35.97 லட்சம்

Updated On :5 செப்டம்பர் 2024, 8:27 pm

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வயநாடு நிவாரண நிதியாக ரூ. 35.97 லட்சம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கேரள மாநிலம், வயநாட்டில் எதிா்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சாா்பில் கேரள முதல்வருக்கு ஏற்கெனவே கடந்த ஜூலை 31-இல் ரூ. 10 லட்சம் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள், ஆதரவாளா்கள், நண்பா்கள் மற்றும் பொதுமக்களிடம் ரூ. 35,97,611 வசூலிக்கப்பட்டு, கட்சியின் மத்திய குழுவுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது என்று அவா் தெரிவித்துள்ளாா்.