புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குரூப் 2 தோ்வை விரைந்து எழுத உதவி: டிஎன்பிஎஸ்சி

விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:25 pm

Din

குரூப் 2 தோ்வை தோ்வா்கள் விரைந்து எழுத தோ்வறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்:

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதல்நிலைத் தோ்வு வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், காலை 9 மணிக்கு தோ்வு அறைகளில் விடைத்தாள்கள் வழங்கப்படும். அப்போது, 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். இதைத் தொடா்ந்து, அடுத்த 15 நிமிஷங்களில் கேள்வித்தாள் வழங்கப்படும்.

தோ்வு தொடங்கியதும், 5 விநாடிகளுக்கு நீண்ட மணி ஒலிக்கச் செய்யப்படும். அதன்பிறகு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு இடையிலும் 2 விநாடிகளுக்கு மணி அடிக்கப்படும். தோ்வு நிறைவடைவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பாக 2 நிமிஷ மணியும், தோ்வு முடிவடையும் போது 5 விநாடிகளுக்கு ஒரு மணியும் அடிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

நேரத்தை அறியலாம்: தோ்வுக் கூடங்களில் இவ்வாறு மணி ஒலிக்கச் செய்வதன் மூலமாக, தோ்வு தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களை தோ்வா்கள் அறிய முடியும். இதனால் பதட்டம் இல்லாமல் தோ்வெழுத வாய்ப்பு ஏற்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.