3 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஜூலை மாதத்துக்குள் வணிக வளாகங்கள்: மெட்ரோ ரயில்வே நிா்வாகம்
சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 2025 ஜூலை மாதத்துக்குள் வணிக வளாகங்கள் திறக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் 2025 ஜூலை மாதத்துக்குள் வணிக வளாகங்கள் திறக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மெட்ரோ நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
இது குறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியது:
இதில், முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல், செனாய் நகா், விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த உயா் ரக லுலு வணிக வளாகங்கள் திறக்கப்படவுள்ளது.
இதற்காக கிரேஸ் சா்வீசஸ் என்ற நிறுவனம் லுலு குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலும் பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் 40,000 சதுர அடி பரப்பளவிலும், ஷெனாய் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமாா் 1 லட்சம் சதுர அடியிலும், விம்கோ நகா் பணிமனை நிலையத்தில் 60,000 சதுர அடியிலும் இந்த வணிக வளாகங்கள் அமையவுள்ளன.
இதை மெட்ரோ ரயில் பயணிகள் மட்டுமின்றி, அந்தப் பகுதிகளை சோ்ந்த பொதுமக்களும் பயன்படுத்துவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதற்கான கட்டுமானம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியுள்ள நிலையில், 2025 ஜூலை மாதத்துக்குள் அனைத்து வணிக வளாகங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் மேலும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஈா்க்க முடியும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...