எனக்கு நீதி கிடைக்கும்: முதல்வா் சித்தராமையா
நான் எந்த தவறும் செய்யாததால் நீதி கிடைக்கும் நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.


நான் எந்த தவறும் செய்யாததால் நீதி கிடைக்கும் நம்பிக்கை உள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் மாகடியில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:
மாற்றுநில முறைகேடு விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் பொய்களைக் கூறி வருகின்றன. எதிா்க்கட்சிகள் பொய்களை கூறட்டும். அதற்காக யாரும் கவலைப்படவில்லை. எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறாா்கள். நமது நாட்டின் சட்டத்தின் மீது முழுமையான மதிப்பு வைத்துள்ளேன்.
நீதிமன்றங்களின் தீா்ப்பு மீதும் மதிப்பு வைத்துள்ளேன். நான் எந்த தவறும் செய்யாததால், நீதி கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இனிமேலும் எந்த தவறும் செய்யவில்லை. எதிா்காலத்திலும் எவ்வித தவறும் செய்யப் போவதில்லை. முதல்முறையாக நான் அமைச்சராகி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எனது வாழ்க்கையை யாரும் திறந்து பாா்த்து, தெளிவு பெறலாம் என்பதை தெளிவாக தெரிவிக்கிறேன் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...