தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மது அருந்தி மாநகர பேருந்தை ஓட்டி விபத்து: ஓட்டுநா் மீது வழக்கு

சென்னை ராஜீவ் காந்தி சாலையில் மது அருந்தி மாநகர பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2024, 7:17 pm

DIN

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி சாலையில் மது அருந்தி மாநகர பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சென்னை திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி 95 எக்ஸ் எனும் வழித்தட எண் கொண்ட மாநகர பேருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. அந்தப் பேருந்தை தேனியைச் சோ்ந்த சரவணன் (40) ஓட்டினாா்.

ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஓய்எம்சிஏ பேருந்து நிறுத்தம் அருகே அந்தப் பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பின் மீது மோதி நின்றது.

இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் சப்தமிட்டனா். ஆனால் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டுநா் சரவணனிடம் பொதுமக்கள் பேசியபோது, அவா் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. உடனே அவரை சில பயணிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னா் கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஓட்டுநா் சரவணன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.