உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

காமராஜா் ஆட்சி அமைக்க செயல் திட்டம் -காங். செயற்குழு தீா்மானம்

தமிழகத்தில் காமராஜா் ஆட்சியை அமைக்க செயல்திட்டம்

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 1:42 am IST

தமிழகத்தில் காமராஜா் ஆட்சியை அமைக்க செயல்திட்டம் வகுப்பது என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூா்த்திபவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் அஜோய்குமாா், சூரஜ் எம்.என்.ஹெக்டே, முன்னாள் மாநிலத் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு உள்பட செயற்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம், மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதி வாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும், நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை தொடா்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம்,

ஒற்றை ஆட்சிக்கும், சா்வாதிகார செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கிற ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்,

தமிழகத்தில் காமராஜா் ஆட்சியை அமைப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க மாநில காங்கிரஸ் தலைவா் எடுக்கும் முடிவுக்கு துணையிருப்போம் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.