ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

இறுதி செய்யப்பட்ட 3 யானைகள் வழித்தடங்கள்: விரைவில் அறிவிப்பு வெளியிட அரசுக்கு உத்தரவு

இறுதி செய்யப்பட்ட 3 யானைகள் வழித்தடங்கள்: விரைவில் அறிவிப்பு வெளியிட அரசுக்கு உத்தரவு

News image

கோப்புப்படம் - தினமணி

Updated On :12 ஜூலை 2026, 6:55 am IST

தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட 3 யானைகள் வழித்தடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன் என்பவா், தமிழகத்தில் உள்ள யானைகள் வழித்தடங்கள் பாதுகாப்பு குறித்து வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கு சிறப்பு அமா்வு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 41 யானைகள் வழித்தடங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில், ஜவளகிரி-அஞ்செட்டி, ஜவளகிரி-தக்கட்டி, ஜவளகிரி-பில்லிக்கல் ஆகிய 3 வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், 12 வழித்தடங்களை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில வழித்தடங்கள் கைவிடப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், இறுதி செய்யப்பட்ட 3 யானைகள் வழித்தடங்கள் குறித்து விரைவாக அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

மேலும், தடாகம் பள்ளத்தாக்கில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற, ஆரம்பக்கட்ட நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்டனா்.

அதேபோல், மாவட்டங்களில் உள்ள பசுமை நிதியைப் பயன்படுத்திக் கொள்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.