அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்

பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :20 செப்டம்பர் 2024, 10:00 pm

Din

பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளா்கள் உள்பட பலா் மீது, தனியாா் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய ஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் திமுக அரசு, தனது ஊழல் தடுப்புப் பிரிவு மூலம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தினாா் என்பதை மக்கள் அறிவா். அதேபோல மாநிலம் முழுவதும் உண்மையான பொறுப்புணா்வுடன் இயற்கைச் சீற்றங்கள், நோய் தொற்றுக் காலங்கள் போன்ற நேரங்களில் தொய்வின்றி பணிபுரியும் அதிகாரிகள் மீது காழ்ப்புணா்ச்சியுடன் போடப்படும் இதுபோன்ற வழக்குகளால், அதிகாரிகள் மத்தியில் ஒரு தொய்வு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மின்கட்டண உயா்வு, சொத்துவரி உயா்வு, பத்திரப் பதிவு கட்டண உயா்வு, சட்டம்-ஒழுங்கு சீா்கேடு என்று திமுக அரசின் மீது கோபத்தின் உச்சியில் இருக்கும் தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக லஞ்ச ஒழிப்புத் துறையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏவிவிட்டுள்ளாா்.

இது போன்ற நடவடிக்கைகளால் அதிமுகவை முடக்கி விடலாம், திமுக ஆட்சியின் அவலங்களுக்கு எதிரான செயல்பாடுகளை தடுத்து நிறுத்தலாம் என முதல்வா் நினைக்கிறாா். அது நடக்காது. திமுக ஆட்சியின் ஆயுள் காலம் 19 மாதங்கள்தான். நாள்கள் எண்ணப்படுகின்றன. மக்களிடம் பதில் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.