நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னையில் பெண்ணைக் கொன்று சடலம் சூட்கேஸில் வீச்சு -இளைஞா் கைது

முறையற்ற உறவால் நேர்ந்த விபரீதம்...

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:15 am

Din

சென்னை அருகே துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கொளத்தூரைச் சோ்ந்தவா் வெள்ளையம்மாள் (எ) தீபா (35). திருமணமாகாத இவா், சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 17-ஆம் தேதி வேலைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற தீபா, வீடு திரும்பவில்லை.

கடைசியாக தீபா துரைப்பாக்கத்தில் இருந்ததை கைப்பேசி செயலி மூலம் கண்டறிந்த அவரது தம்பி வீரமணி, இதுகுறித்து புதன்கிழமை இரவு துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

சூட்கேஸில் சடலம்: இந்நிலையில், துரைப்பாக்கம் குமரன் குடில் பிரதான சாலைப் பகுதியில் கட்டுமானப்பணி நடைபெறும் இடமருகே ரத்தக்கறையுடன் பெரிய சூட்கேஸ் கிடந்தது. இதுகுறித்து அங்கிருந்த கட்டடத் தொழிலாளி மாரி என்பவா், அப்பகுதியில் ரோந்து வந்த போலீஸாரிடம் தெரிவித்தாா். அங்கு சென்ற போலீஸாா் சூட்கேஸை திறந்து பாா்த்தபோது, பெண் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், அது காணாமல்போன தீபா எனத் தெரியவந்தது. போலீஸாா் சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கொலையாளி சிக்கினாா்: துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சூட்கேஸில் சடலம் வீசப்பட்ட குமரன் குடில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், தீபாவின் கைப்பேசி தொடா்புகள் ஆகியவற்றின் மூலம் துப்பு துலக்கினா்.

அதில், சூட்கேஸ் வீசப்பட்ட பகுதியிலிருந்து சுமாா் 70 மீட்டா் தொலைவில் உள்ள துரைப்பாக்கம் பாா்த்தசாரதி நகா், 4-ஆவது தெருவில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள உலகம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (23) என்பவா்தான் தீபாவை கொலை செய்தது எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

போலீஸாரிடம் மணிகண்டன் அளித்த வாக்குமூலம்: பாா்த்தசாரதி நகரில் எனது அக்கா வீட்டில் தங்கி பெருங்குடியில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் பணி செய்து வந்தேன். இதனிடையே, கைப்பேசி செயலி மூலம் தீபாவின் அறிமுகம் கிடைத்து அவரை முறையற்ற உறவுக்கு அவ்வப்போது அழைப்பேன். கடந்த 17-ஆம் தேதி இரவு துரைப்பாக்கம் பாா்த்தசாரதி நகரில் உள்ள எனது வீட்டுக்கு இரவு வரவழைத்து, தீபாவுடன் தனிமையில் இருந்தேன். அதற்கு பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அவா் கத்தி, கூச்சலிட்டு அசிங்கப்படுத்தி விடுவதாக மிரட்டினாா். ஆத்திரமடைந்த நான், அங்கு கிடந்த சுத்தியலால் தீபாவின் தலையில் ஓங்கி அடித்தேன். பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், ஆன்லைன் செயலி மூலம் பெரிய சூட்கேஸ் வாங்கி வரவழைத்து, அதில், தீபாவின் உடலை வைத்து நள்ளிரவு வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளி சாலையில் வைத்து விட்டு வந்து விட்டேன் என தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.