அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

மத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :27 செப்டம்பர் 2024, 7:22 pm

Din

மத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள 112 கிலோ ‘சூடோ எபிட்ரின்’ என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட இருவரும், திமுக அயலக அணி நிா்வாகியாக இருந்த ஜாபா் சாதிக்கின் கூட்டாளிகள் என செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் சமூக விரோத சக்திகளும், ஆளும் தரப்பினரும் பிரிக்க முடியாத அளவு ஒட்டி உறவாடுவது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.

மேலும், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவரும் தன் கட்சிக்காரா்களுக்கு முதல்வரே தியாகிகள் பட்டம் வழங்குவதால், சமூக விரோத சக்திகள் அனைவரும் தெம்புடன் வலம் வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

பொது வெளியில் மத்திய அரசை எதிா்ப்பதும், தனது குடும்பம் மற்றும் கட்சி நிா்வாகிகள் நலன்களைப் பாதுகாக்க திரை மறைவில் ஆதரவாக இருப்பதும் என்று இரட்டை வேடம் ஆடுகிறதோ திமுக அரசு என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

போதைப் பொருள்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரணகா்த்தாக்கள் யாா் என்பது நன்கு தெரிந்திருந்தும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் பிடிக்கும் மா்மம் என்ன என்று மக்கள் குழம்பிப் போயுள்ளனா்.

இந்நிலை தொடா்ந்தால், தமிழக இளைஞா்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிா்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.