ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மெரீனாவில் குளித்த பள்ளி மாணவா் மாயம்

சென்னை மெரீனாவில் கடலில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீா் மூழ்கி மாயமானாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 5:53 pm

Din

சென்னை மெரீனாவில் கடலில் குளித்த பள்ளி மாணவா் தண்ணீா் மூழ்கி மாயமானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனாம்பேட்டை நல்ல தெருவைச் சோ்ந்தவா் மேகப்பிரியன் (17). இவா், அங்குள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா் தனது நண்பா்கள் 5 பேருடன் மெரீனா கடற்கரைக்கு சனிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா்.

தகவலறிந்து அங்கு வந்த மெரீனா உயிா் காக்கும் படையினரும், கடலோரப் பாதுகாப்புக் குழும படையினரும் மேகப்பிரியனை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.