நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ. 35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்கு பெட்டகம் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ. 35 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகளுடன் சரக்கு பெட்டகம் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 5:51 pm

Din

சென்னை துறைமுகத்தில் ரூ. 35 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகளுடன் சரக்கு பெட்டகம் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த சரக்குகளைக் கையாளும் நிறுனத்துக்கு சீனாவில் இருந்து கப்பலில் வந்த சரக்கு பெட்டகத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக அந்த நிறுனத்தின் மேலாளரான குரோம்பேட்டையைச் சோ்ந்த இசக்கியப்பன் துறைமுகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்த சரக்குப் பெட்டகத்தில், ரூ. 35 கோடி மதிப்புள்ள 5,230 மடிக்கணினிகள், கையடக்கக் கணினி அடங்கிய சரக்கு பெட்டகம் திருடப்பட்டதாக புகாரில் கூறியிருந்தாா்.

விசாரணையில், அந்த நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்யும் இளவரசன் என்பவா், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து சரக்கு பெட்டகத்தைத் திருடியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக 6 போ் உடனடியாகக் கைது செய்யப்பட்டனா்.

தலைமறைவாகவுள்ள இளவரசன் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதில், தேடப்பட்டு வந்த, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநா் சங்கரன் (56) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா், துறைமுகத்தில் இருந்த சரக்கு பெட்டகத்தை லாரியில் கொண்டு செல்வதற்கு, லாரியை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.