

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஷமீம் அகமது, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது.
அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த ஷமீம் அகமதுவை, சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டிருந்தாா்.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நீதிபதி ஷமீம் அகமதுவுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
இதையடுத்து நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டாா். இதனால், சென்னை உயா் நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 67-ஆக உயா்ந்துள்ளது. இருப்பினும், 8 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
நீதிபதி ஷமீம் அகமது, அலாகாபாத்தில் கடந்த 1966-ஆம் ஆண்டு பிறந்தவா். சட்டப்படிப்பை முடித்து 1993-ஆம் ஆண்டு வழக்குரைஞராக பணியைத் தொடங்கிய அவா் 2019-ஆம் ஆண்டு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷமீம் அகமதுவை, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ். அமல்ராஜ் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் வரவேற்றுப் பேசினா். பின்னா், நீதிபதி ஷமீம் அகமது ஏற்புரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.