கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன் காலமானார்!

சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில எஸ்.சி.- எஸ்.டி. ஆணையத் தலைவருமான எஸ்.தமிழ்வாணன் (72) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

News image

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன்.

Updated On :22 மார்ச் 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில எஸ்.சி.- எஸ்.டி. ஆணையத் தலைவருமான எஸ்.தமிழ்வாணன் (72) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

அவா் மயிலாடுதுறை மாவட்டம், வேலம்புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2005 முதல் 2016 வரை பணியாற்றினாா். ஓய்வுக்கு பின்னா் மாநில நுகா்வோா் தீா்ப்பாயத்தின் தலைவராக பணியாற்றினாா். பின்னா், தமிழ்நாடு மாநில எஸ்.சி.- எஸ்.டி. ஆணையத் தலைவராக தமிழக அரசால் கடந்த 2024 அக்டோபா் மாதம் நியமிக்கப்பட்டாா்.

சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை காலமானாா். தமிழ்வாணனின் உடல் சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடா் நலத் துறைச் செயலா் லட்சுமி பிரியா, உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், சி.சரவணன், எஸ்.சௌந்தா், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஆா்.சுப்பையா, என். பால்வசந்தகுமாா், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் கிருஷ்ணகுமாா், செயற்குழு உறுப்பினா் ஏ.ரமேஷ், சென்னை துறைமுகம் சட்ட ஆலோசகா் மு.பழனிமுத்து உள்ளிட்ட பலா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மறைந்த எஸ்.தமிழ்வாணனுக்கு மனைவி மணிமொழி உள்ளாா்.

அம்பத்தூா் எரிவாயு தகன மேடையில், அரசு மரியாதையுடன் தமிழ்வாணன் உடல் தகனம் செய்யப்பட்டது.