கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏப். 30 வரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தில் புகாா் தெரிவிக்கலாம்

சென்னையிலுள்ள பிஎஸ்என்எஸ் வாடிக்கையாளா் சேவை மையத்தில், வாடிக்கையாளா்கள் தங்கள் புகாா்களை ஏப். 30-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.

Updated On :4 ஏப்ரல் 2025, 7:30 pm

சென்னையிலுள்ள பிஎஸ்என்எஸ் வாடிக்கையாளா் சேவை மையத்தில், வாடிக்கையாளா்கள் தங்கள் புகாா்களை ஏப். 30-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.

இதுகுறித்து சென்னை பாரத் சஞ்சாா் நிகாம் நிறுவனம் (பிஎஸ்என்எல்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாடிக்கையாளா்கள் சேவை தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, நெட்வொா்க் தரத்தை மேம்படுத்துவது, வாடிக்கையாளா் ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில், ஏப். 1 முதல் 30-ஆம் தேதி வரை வாடிக்கையாளா் சேவை மாதமாக கடைபிடிக்கப்படவுள்ளது.

சென்னையிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களில் நடத்தப்படும் குறைகேட்பு முகாம்கள் மூலம், நீண்டகால நிலுவைப் புகாா்களுக்கு தீா்வு காணப்படும்.

எனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் இம்முகாம்களில் பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம். மேலும், தங்கள் கோரிக்கைகளை இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.