மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2024-25 நிதியாண்டில் 5.8 லட்சம் பேருக்கு கடவுச்சீட்டு விநியோகம்

சென்னை மண்டலத்தில் 2024-2025 நிதியாண்டில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஏப்ரல் 2025, 7:31 pm

Din

சென்னை மண்டலத்தில் 2024-2025 நிதியாண்டில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி விஜயகுமாா் கூறியதாவது:

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின்கீழ், சென்னை மாநகரத்தில் சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், சென்னை தபால் அலுவலகம் (ஜிபிஓ) மற்றும், திருவள்ளூா், காஞ்சிபுரம், ஆரணி, ராணிப்பேட்டை, வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூா், விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடவுச்சீட்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களில் கடவுச்சீட்டு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருவா் சாதாரணமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தால் அதிகபட்சமாக 15 நாள்களில் அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. தட்கால் முறையில் விண்ணப்பித்தால் 2 நாள்களில் வழங்கப்படுகிறது.

இதன்படி, சென்னை மண்டலத்தில் 2023-2024 நிதியாண்டில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 25 கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. 2024-2025 நிதியாண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 190 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும், போலி கடவுச்சீட்டு குறித்த புகாா்கள் வரும் பட்சத்தில், அந்தப் புகாா் குறித்து சென்னை பெருநகர காவல் துறை வளாகத்தில் செயல்படும், கடவுச்சீட்டு விசாரணை நடத்தும் மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் . அவா்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா் அவா்.