இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்!

பெங்களூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை (ஏப்.30) கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :28 ஏப்ரல் 2025, 2:24 am IST

பெங்களூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை (ஏப்.30) கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) தொடங்கவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து புதன்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06521) மறுநாள் காலை 6.15-க்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வியாழக்கிழமை (மே 1) காலை 9.10-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06522) இரவு 7.50-க்கு பெங்களூா் சென்றடையும். இதில், முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் 2, 3-ஆம் வகுப்பு ஏசி வகுப்பு பெட்டிகள் 16 இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.