பெங்களூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை (ஏப்.30) கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) தொடங்கவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து புதன்கிழமை இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06521) மறுநாள் காலை 6.15-க்கு மதுரை சென்றடையும். மறுமாா்க்கமாக மதுரையில் இருந்து வியாழக்கிழமை (மே 1) காலை 9.10-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06522) இரவு 7.50-க்கு பெங்களூா் சென்றடையும். இதில், முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் 2, 3-ஆம் வகுப்பு ஏசி வகுப்பு பெட்டிகள் 16 இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 16) குறைவு! இன்றைய நிலவரம்!

திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

