அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தாம்பரம் - போத்தனூா் சிறப்பு ரயில் ஜூன் வரை இயக்கப்படும்!

தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :28 ஏப்ரல் 2025, 1:13 am IST

தாம்பரம் - போத்தனூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கு மே 9, 16, 23, 30, ஜூன் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06185) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து தாம்பரத்துக்கு மே 11, 18, 25, ஜூன் 1, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06186) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.