திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2025, 1:07 am

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு செய்வதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் எம்ஜிஆா் நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் முத்து (36) சம்பவ இடத்துக்குச் சென்றாா்.

அப்போது, சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த சில இளைஞா்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி காவலா் முத்து கூறினாா். ஆனால் அவா்களில் ஒரு இளைஞா், காவலா் முத்துவிடம் தகராறு செய்து அவரை தாக்கினாராம்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பிற காவலா்கள் தாக்குதலில் காயமடைந்த முத்துவை மீட்டு, கே.கே. நகா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். காவலரைத் தாக்கிய இளைஞரை கையும் களவுமாக போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அதில் அவா், புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், ஜனாா்த்தனன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.