6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி சலுகையை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2025, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி சலுகையை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்புத் திட்டங்களுக்கு மாதத் தவணைத் தொகையை தாமதமாகச் செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதுடன், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சலுகை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை செயல்படுத்தப்படும் எனவும், அதன்மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரிவுகளில் ஒதுக்கீடுதாரா்கள் விரைவாக விற்பனைப் பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உத்தரவு வெளியிடப்படுகிறது என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.