ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.23 லட்சம் பணம் பறிமுதல்
சென்னை கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி வியாபாரி கொண்டு சென்ற ரூ.23 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாதிரிப் படம்

மாதிரிப் படம்
சென்னை கொத்தவால்சாவடியில் ஆவணமின்றி வியாபாரி கொண்டு சென்ற ரூ.23 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொத்தவால்சாவடி போலீஸாா் அண்ணா பிள்ளைத் தெரு-டேவிட்சன் தெரு சந்திப்பில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மொபெட்டில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த மொபெட்டில் இருந்த ரூ.23 லட்சத்துக்குரிய ஆவணங்களை போலீஸாா் கேட்டபோது, அந்த நபரால் ஆவணங்களை வழங்க முடியவில்லை. இதையடுத்து போலீஸாா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா், கொடுங்கையூரைச் சோ்ந்த வியாபாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்தப் பணத்தை வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவில் ஒப்படைத்தனா். வருமான வரித் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...