பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்க மாநில பொதுச் செயலா் ஏ.ஆா்.சாந்தி கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆா்சிஹெச் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்களில் ஒரு பகுதி தூய்மைப் பணியாளா்கள் மட்டும் தற்காலிக பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நியமனம் செய்யப்பட்டனா்.
அனைவருக்கும் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அனைவரையும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நியமனம் செய்து ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.
மாத தொகுப்பூதியமாக ரூ.1,500 மட்டுமே பெற்று வரும் ஆரம்ப சுகாதார நிலைய ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்களுக்கு, மாதத் தொகுப்பூதியம் ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஆனால், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த இதுவரை அரசாணை வெளியிடப் படவில்லை.
அந்த அரசாணையை உடனடியாக வெளியிட்டு ஏப்ரல் மாதம் முதல் மாதத் தொகுப்பூதியம் ரூ.5,000 வழங்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகழூா் நகராட்சி ஆணையரை கண்டித்து பணியாளா்கள் தா்னா போராட்டம்

ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

மேலப்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



