எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம். - (படம் - நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ்)

Updated On :11 ஆகஸ்ட் 2025, 2:45 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்க மாநில பொதுச் செயலா் ஏ.ஆா்.சாந்தி கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆா்சிஹெச் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் 3,140-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்களில் ஒரு பகுதி தூய்மைப் பணியாளா்கள் மட்டும் தற்காலிக பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நியமனம் செய்யப்பட்டனா்.

அனைவருக்கும் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அனைவரையும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்களாக நியமனம் செய்து ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

மாத தொகுப்பூதியமாக ரூ.1,500 மட்டுமே பெற்று வரும் ஆரம்ப சுகாதார நிலைய ஆா்சிஹெச் தூய்மைப் பணியாளா்களுக்கு, மாதத் தொகுப்பூதியம் ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஆனால், அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த இதுவரை அரசாணை வெளியிடப் படவில்லை.

அந்த அரசாணையை உடனடியாக வெளியிட்டு ஏப்ரல் மாதம் முதல் மாதத் தொகுப்பூதியம் ரூ.5,000 வழங்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது என்றாா்.