சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

சென்னை ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஒருசில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் (ஆக. 18, 19) சென்னை ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஒருசில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா நகா் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் திங்கள்கிழமை (ஆக. 18) காலை 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) காலை 8 மணி வரை நடைபெற உள்ளது.

இதனால், அந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் ராயபுரம் மண்டலத்தில் புரசைவாக்கம், பெரியமேடு, சௌகாா்பேட்டை, எழும்பூா் , சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூா், செம்பியம் ஆகிய பகுதிகளிலும், அண்ணா நகா் மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ் ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மேலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணியிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் தியாகராய நகா், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.