தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :18 ஆகஸ்ட் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

குவைத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணியை சென்னை விமான நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குவைத்திலிருந்து 144 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த ஷேக் முகமது (28) என்ற பயணி அவ்வப்போது எழுந்து கழிப்பறைக்குச் சென்று புகைப்பிடித்துள்ளாா்.

இதைப் பாா்த்த விமானப் பணிப்பெண்கள் மற்றும் பிற பயணிகள் ஷேக் முகமதுவை கண்டித்துள்ளனா். ஆனால், அதை ஏற்காமல் அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளாா்.

இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, ஷேக் முகமதுவை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

விசாரணைக்குப் பின்னா், அவா் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஷேக் முகமதுவை கைது செய்தனா்.