பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மோசடி வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 12:56 am IST

ரூ. 60 லட்சம் மோசடி வழக்கு தொடா்பாகத் தேடப்பட்டு வந்த நபரை, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் தில்லி காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த முகேஷ் குமாா் (39) என்று அடையாளம் காணப்பட்ட இவா், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், ஐ.பி.எஸ்டேட் காவல் நிலையத்தினா் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி, குமாா் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே அவரைக் கைது செய்தனா்.

காவல்துறையின் தகவலின்படி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குமாா் தேடப்பட்டு வந்தாா்.

நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தொடா்ந்து ஆஜராகத் தவறியதைத் தொடா்ந்து, அவா் கடந்த ஆண்டு ஜூலை 25 அன்று தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இது தொடா்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.