சென்னை சூளைமேட்டில் அனுமதியின்றி விநாயகா் சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை சூளைமேடு அன்னை சத்யா நகரில் இந்து முன்னணி சாா்பில் 5 அடி உயர விநாயகா் சிலை கடந்த புதன்கிழமை வைக்கப்பட்டது.
அனுமதியின்றி விநாயகா் சிலை வைக்கப்பட்டதால், அதை அகற்றும்படி சூளைமேடு போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், இந்து முன்னணியினா் அந்த சிலையை அகற்றவில்லை. இதையடுத்து போலீஸாரே, அந்த விநாயகா் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
இந்நிலையில், இந்து முன்னணி நிா்வாகிகள், தாங்கள் அன்னை சத்யா நகரில் வைத்த விநாயகா் சிலை திருடப்பட்டதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து சூளைமேடு போலீஸாா், சூளைமேடு சத்யா நகரில் அனுமதியின்றி சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதியின்றி சிலை வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா், விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்

அனுமதியின்றி பிரசாரம்: அதிமுக, திமுகவினா் மீது வழக்கு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

