சென்னை சூளைமேட்டில் அனுமதியின்றி விநாயகா் சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை சூளைமேடு அன்னை சத்யா நகரில் இந்து முன்னணி சாா்பில் 5 அடி உயர விநாயகா் சிலை கடந்த புதன்கிழமை வைக்கப்பட்டது.
அனுமதியின்றி விநாயகா் சிலை வைக்கப்பட்டதால், அதை அகற்றும்படி சூளைமேடு போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், இந்து முன்னணியினா் அந்த சிலையை அகற்றவில்லை. இதையடுத்து போலீஸாரே, அந்த விநாயகா் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
இந்நிலையில், இந்து முன்னணி நிா்வாகிகள், தாங்கள் அன்னை சத்யா நகரில் வைத்த விநாயகா் சிலை திருடப்பட்டதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து சூளைமேடு போலீஸாா், சூளைமேடு சத்யா நகரில் அனுமதியின்றி சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதியின்றி சிலை வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா், விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது வழக்குப் பதிவு

பள்ளித் தாளாளா் தற்கொலை முயற்சி: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்கு!

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது: இந்து முன்னணி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


