/
சாத்தான்குளம் அருகே பூவுடையாா்புரத்தில் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ரவிசந்தா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
திருநெல்வேலியில் இம்மாதம் 21இல் நடைபெறவுள்ள இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், சாத்தான்குளம் ஒன்றியப் பொதுச் செயலா் மாயவன முத்துசாமி, ஒன்றியச் செயலா் கலியமுத்து, ஒன்றிய துணைத் தலைவா்கள் செல்வமுத்துக்குமாா், சித்திரைச்செல்வன், இசக்கி, ஒன்றியச் செயலா் வெங்கடகிருஷ்ணன், இந்து முன்னணி இணையதளப் பொறுப்பாளா் சிவநேசன், மோடி நகா் இந்து முன்னணி பொறுப்பாளா் லெட்சுமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.









