தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஆகஸ்ட் 2025, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) இரவு 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06003) மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06004) செப். 1-ஆம் தேதி பெங்களூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் மங்களூரு சென்ட்ரலிலிருந்து காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஆக. 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.