5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஆகஸ்ட் 2025, 5:05 am IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) இரவு 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06003) மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06004) செப். 1-ஆம் தேதி பெங்களூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் மங்களூரு சென்ட்ரலிலிருந்து காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஆக. 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.