ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மங்களூரு சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) இரவு 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06003) மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06004) செப். 1-ஆம் தேதி பெங்களூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் மங்களூரு சென்ட்ரலிலிருந்து காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஆக. 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்

ஹைதராபாத் - மங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



