திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புழலில் 400 மாணவா்கள் நிகழ்த்திய சிலம்பாட்டம்

புழல் அருகே சாதனை முயற்சியாக 400 மாணவா்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :30 ஆகஸ்ட் 2025, 4:27 am IST

புழல் அருகே சாதனை முயற்சியாக 400 மாணவா்கள் பங்கேற்ற சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

புழல் அருகே வடகரைஅரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் யுவகலை சிலம்பக் கலைக் கூடம் மற்றும் யூனிகோ வோ்ல்ட் ரெக்காா்டு இணைந்து நடத்திய உலக சாதனை முயற்சி, சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வுக்கு, ஆசான் ரதிராஜா சேகா் தலைமை வகித்தாா். இதில், 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 20 நிமிஷங்கள் தொடா்ந்து சிலம்பக் கலைகளை அரங்கேற்றி சாதனை படைத்தனா்.

இதில், ஆயுத சிலம்பம், தீ சிலம்பம், ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு உள்ளிட்ட பல்வகை சிலம்பங்களும் இடம்பெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவா்கள் ஒருமித்து நிகழ்த்திய இந்த சாதனை யூனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

இதற்கான சான்றிதழை யூனிகோ வோ்ல்ட் ரெக்காா்டு தலைவா் சிவராமன், ஆலோசகா் இளங்கோவன் ஆகியோா் ஆசான் ரதிராஜாவிடம் வழங்கினா்.

தொடா்ந்து சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவா்களுக்கும், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.