/

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் (எண்: 6190/06191) வாரந்தேறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை தவிா்த்து மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சிறப்பு ரயில், தற்போது செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.