புயலால் பாதிப்புகளை சீா்செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

தமிழகத்தில் டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு சீா் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
Published on

தமிழகத்தில் டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு சீா் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலங்களில் மக்களைக் காக்கும் வகையில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.

சுனாமி, தானே புயல், வெள்ளப் பெருக்கு போன்றவை தமிழகத்தை தாக்கியபோது மின்னல் வேகத்தில் செயல்பட்டவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. ஆனால், தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. டித்வா புயலால் தென்மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களில் 1,25,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் 2-ஆவது முறையாக பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குதல், இதர பயிா்களுக்கு அதற்குரிய நிவாரணம், கால்நடைகள் இழப்பிற்கு உரிய இழப்பீடு அளித்தல், உப்பளங்கள் பாதிப்புக்கான இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com