அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புயலால் பாதிப்புகளை சீா்செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

தமிழகத்தில் டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு சீா் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு சீா் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலங்களில் மக்களைக் காக்கும் வகையில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.

சுனாமி, தானே புயல், வெள்ளப் பெருக்கு போன்றவை தமிழகத்தை தாக்கியபோது மின்னல் வேகத்தில் செயல்பட்டவா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. ஆனால், தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. டித்வா புயலால் தென்மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களில் 1,25,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் 2-ஆவது முறையாக பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குதல், இதர பயிா்களுக்கு அதற்குரிய நிவாரணம், கால்நடைகள் இழப்பிற்கு உரிய இழப்பீடு அளித்தல், உப்பளங்கள் பாதிப்புக்கான இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.