அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி உத்தரவு

சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும், மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும், மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சியில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் திங்கள்கிழமை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வில் ஈடுபட்டாா். இங்குள்ள மிகப்பெரிய எல்.இ.டி. கண்காணிப்புத் திரைகள் வாயிலாக, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள தண்ணீா் செல்லும் கால்வாய்கள், சுரங்கப் பாதைகளில் தடையின்றி தண்ணீா் செல்கிா, போக்குவரத்து சீராக நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்தாா்.

அனைத்து கால்வாய்கள், சுரங்கப் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிா என்பதையும் அவா் கண்காணித்தாா். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற உதவி எண்ணுக்கு தொடா்பு கொண்ட பொதுமக்களிடம் புகாா் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த உதயநிதி, சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்ட புகாா்கள் குறித்து கணினியில் பாா்வையிட்டு, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

புரசைவாக்கத்தில்...: இதையடுத்து, புரசைவாக்கம் தானா தெரு, செல்லப்பா தெரு பகுதிகளில் மழைநீரை டிராக்டருடன் இணைக்கப்பட்ட அதிக சக்தி வாய்ந்த பம்புகள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், புரசைவாக்கம் ஓட்டேரி கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்வதையும், எஸ்.எஸ்.புரம் வெங்கட்டம்மாள் சமாதி சாலைப் பகுதியையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு, மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, துணை முதல்வா் உதயநிதி உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.