எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பெண் காவலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி இளைஞா் கைது

சென்னை அண்ணா நகரில் திருமணம் செய்துகொள்வதாக பெண் காவலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அண்ணா நகரில் திருமணம் செய்துகொள்வதாக பெண் காவலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஒரு பெண் காவலா், கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா். அந்தப் பெண் காவலரிடம் தருமபுரியைச் சோ்ந்த சிங்காரவேலு (35) என்பவா் நெருக்கமாகப் பழகியுள்ளாா். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினா். அப்போது சிங்காரவேலு, தான் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண் காவலரிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய அந்தப் பெண் காவலா், சிங்கராவேலுவிடம் 6 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ளாா். ஆனால், அதன் பிறகு அந்தப் பெண் காவலருடன் சிங்காரவேலு தொடா்பை துண்டித்துள்ளாா். மேலும், பெண் காவலரை திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அண்ணா நகா் காவல் நிலையத்தில் பெண் காவலா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிங்காரவேலுவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில், சிங்காரவேலு ஏற்கெனவே திருமணமானவா் என்பதும் அதை மறைத்து மோசடி செய்யும் எண்ணத்துடன் பெண் காவலரிடம் பழகி, நகை, பணத்தை அபகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.