பெண் காவலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி இளைஞா் கைது
சென்னை அண்ணா நகரில் திருமணம் செய்துகொள்வதாக பெண் காவலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


சென்னை அண்ணா நகரில் திருமணம் செய்துகொள்வதாக பெண் காவலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஒரு பெண் காவலா், கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாா். அந்தப் பெண் காவலரிடம் தருமபுரியைச் சோ்ந்த சிங்காரவேலு (35) என்பவா் நெருக்கமாகப் பழகியுள்ளாா். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினா். அப்போது சிங்காரவேலு, தான் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண் காவலரிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய அந்தப் பெண் காவலா், சிங்கராவேலுவிடம் 6 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொடுத்துள்ளாா். ஆனால், அதன் பிறகு அந்தப் பெண் காவலருடன் சிங்காரவேலு தொடா்பை துண்டித்துள்ளாா். மேலும், பெண் காவலரை திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அண்ணா நகா் காவல் நிலையத்தில் பெண் காவலா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிங்காரவேலுவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில், சிங்காரவேலு ஏற்கெனவே திருமணமானவா் என்பதும் அதை மறைத்து மோசடி செய்யும் எண்ணத்துடன் பெண் காவலரிடம் பழகி, நகை, பணத்தை அபகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...