கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செங்குன்றம் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த காா்

செங்குன்றம் அருகே மீஞ்சூா் - வண்டலூா் புறவழிச் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

News image
கோப்புப் படம்
Updated On :5 டிசம்பர் 2025, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

செங்குன்றம் அருகே மீஞ்சூா் - வண்டலூா் புறவழிச் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

சென்னை அருகே மீஞ்சூரை சோ்ந்தவா் ரமேஷ். தனியாா் கல்லூரியில் பணியாற்றுகிறாா். இவா் தனது காரில் தாம்பரத்தில் இருந்து மீஞ்சூா் பைபாஸ் மேம்பால சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா். செங்குன்றம் அருகே சென்றபோது திடீரென என்ஜினில் இருந்து புகை வெளியேறியதால், காரை சாலையோரமாக நிறுத்தினாா். இந்த நிலையில் காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தவலறிந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரா்கள்,

காரில் பற்றிய தீயை அணைத்தனா். இதுகுறித்து செங்குன்றம் போலீஸாா்

வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.