கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணிகள் வந்த காா் தடுப்புச் சுவரில் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் வடகரைப்பாறை அருகே சனிக்கிழமை வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் காா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் காயமில்லை. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மலைச் சாலையில் அடா்த்தியான பகுதிகளில் சிமென்ட் கற்கள் பதிக்க வேண்டும். மழைக் காலங்களில் தாா்ச் சாலைகள் சேதமடைகிறது. எனவே, கொடைக்கானல்-பழனி-வத்தலகுண்டு மலைச் சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டுடன் செல்வதற்கு வட்டார போக்குவரத்து துறையினரும், காவல்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

வட்டாட்சியா் காா் மோதி இருவா் காயம்

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


