கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் குவிக்கப்படும் கட்டடக் கழிவுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது.
கொடைக்கானல் பகுதிகளான சீனிவாசபுரம், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, உகாா்த்தேநகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதோடு அவற்றின் கழிவுகள் கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையான சீனிவாசபுரம் பகுதியில் குவிக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து இதே நிலை நீடித்தால் மழை பெய்யும் போது அந்தப் பகுதி சாலைகளில் கற்கள் சிதறுவதோடு, மண் நீரோடைக்குள் தேங்குவதால் மழைநீா் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே மலைச் சாலைகளை ஆக்கிரமிப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கொடைக்கானலில் கொட்டப்பட்ட கழிவுகள்: நகராட்சித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல் மலைச் சாலையில் தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


