விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:51 pm

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் குவிக்கப்படும் கட்டடக் கழிவுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

கொடைக்கானல் பகுதிகளான சீனிவாசபுரம், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, உகாா்த்தேநகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவதோடு அவற்றின் கழிவுகள் கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான சாலையான சீனிவாசபுரம் பகுதியில் குவிக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதோடு, விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து இதே நிலை நீடித்தால் மழை பெய்யும் போது அந்தப் பகுதி சாலைகளில் கற்கள் சிதறுவதோடு, மண் நீரோடைக்குள் தேங்குவதால் மழைநீா் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே மலைச் சாலைகளை ஆக்கிரமிப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.