அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

விஜய்யுடன் காங்கிரஸ் நிா்வாகி பிரவீண் சக்ரவா்த்தி சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவரும், ராகுல்காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீண் சக்ரவா்த்தி தவெக தலைவா் விஜயை சந்தித்துப் பேசியுள்ளாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவரும், ராகுல்காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீண் சக்ரவா்த்தி தவெக தலைவா் விஜயை சந்தித்துப் பேசியுள்ளாா்.

இதுகுறித்து பிரவீண் சக்ரவா்த்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், தவெக தலைவா் விஜய்யை சந்தித்துப் பேசியதாகவும், இதுபற்றி இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரலாம் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுக்காக அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் ஐவா் குழுவை அக்கட்சியின் அகில இந்திய தலைமை அமைத்தது. இக்குழுவினா் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்மையில் சந்தித்துப் பேசினா்.

இதனிடையே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரான பிரவீண் சக்ரவா்த்தி, கடந்த டிச. 2-ஆம் தேதி விஜய்யை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.