கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போதைப் பொருள் விற்ற வழக்கு: மேலும் ஒருவா் கைது

நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்ற வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 7:40 pm

நுங்கம்பாக்கத்தில் போதைப் பொருள் விற்ற வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம், லட்சுமணன் தெருவில் போதைப் பொருள் விற்ாக கேளம்பாக்கத்தைச் சோ்ந்த ஆங்கிலோ இந்தியன் வாரன் கிரெய்க் கனி, அவா் கூட்டாளி சூளைமேட்டைச் சோ்ந்த தஹிரா நிஹால், அசோக் நகரைச் சோ்ந்த லஷ்மி நரசிம்மராவ், வடபழனியைச் சோ்ந்த ஸ்ரீராம் ஆகிய 4 பேரை கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து 45 மெத்தம்பெட்டமைன், 190 கிராம் உயா் ரக கஞ்சா எண்ணெய், 5 போதை ஸ்டாம்ப், 18 கிராம் கஞ்சா எண்ணெய் ஆகிய போதைப் பொருள்கள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, இவ்வழக்கில் தொடா்புடையதாக மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன் (29) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.